பேருந்தில் பயணப்படும் ஒரு பெண்
கவிதை படிக்கிறாள்
தலைப்பு : ஏன் தண்டிக்கிறேன்
நான் உன்னை மன்னிக்கலாம் !!
எதிரில் வருபவன் உன்னை பிரதிபலிக்கலாம்
அதனால் தண்டிக்கிறேன்.
- மா காளி
புதுப்பெண் அவதாரம் படைக்கிறாள்.
பேருந்தில் பயணப்படும் ஒரு பெண்
கவிதை படிக்கிறாள்
தலைப்பு : ஏன் தண்டிக்கிறேன்
நான் உன்னை மன்னிக்கலாம் !!
எதிரில் வருபவன் உன்னை பிரதிபலிக்கலாம்
அதனால் தண்டிக்கிறேன்.
- மா காளி
புதுப்பெண் அவதாரம் படைக்கிறாள்.
மலைப்பதற்கும்
மலையாய் இருப்பதற்கும்
இனி நேரம் இல்ல !
கைக்கு எட்டியதை பறிப்போம்
மரத்தை முடித்துவிடலாம் !!
இரவின் தூரம் விழித்தவனுக்கு
உணவின் ருசி பசித்தவனுக்கு
ஓவியம் தெரியும் ரசிப்பவனுக்கு
வாழ்க்கை புரியும் உழைப்பவனுக்கு
அவளைத் தேடியே
அங்கேயே நின்றேன்
பின்னிருந்து பிஞ்சு விரல் தொட்டது - திரும்பினேன்
நின்றாள் அவள் குழந்தையுடன்
முழித்தேன் நான் புன்னகையுடன்