மௌனம் பாராட்டும்

மௌனம் பாராட்டும்
மழைபோல்
உன் சிரிப்பில் இனிக்கிறது
என் கவிதை

என் கவிதை

அன்றன்றைக்கே கிழிக்கபடாமால்
மொத்தமாய் கிழிக்கபடும்
சோம்பேரியின் நாட்காட்டியயை
போல!
தேங்கிய கனவுகளை
தாங்க முடியாது
உடைத்துக்கொண்டோடும் அணையை
போல!
தேக்கிய என் பேனா மை!
நனைக்கிறது என் காகிதத்தை!
இது தான் "என் கவிதை"!

கருப்பாம் வெள்ளையாம்

கனவுகள் கானும் போது
கருப்பா வெள்ளையா பார்க்க தெரியாது!
காதலும் ஒரு கனவு தான்!!

வான் வரையும் ஓவியம்

நீல வானம் இழைத்த
கருப்பு வெள்ளை ஓவியம்
மழை மேகம் !


கல்லூரி நாட்கள்

கல்லூரியில் கடந்து போன
வசந்த நாட்கள் 
மீண்டும் வரப்போவதில்லை  - என்று 
தெரிந்தே ஏங்கும் 
பிள்ளை மனம் பரவலாய் எல்லோர்க்கும் !