எட்டு வை

காடு

மலை

கடந்து போ 


கனவு 

கான 

நடந்து போ 


வான் 

ஏற 

பறந்து போ 


மீன்

போல

நீந்தி போ


பிள்ளை 

என

தவழ்ந்து போ 


தினமும் 

ஒருபடியாவது 

நகர்ந்து போ 



காதலும் கடலும்

நுரையால் முத்தமிட்டு 

மண்ணை அறிக்கும் 

ஆதி மர்மம் 

- கடல்


பார்வையால் சண்டையிட்டு 

என்னை ஈர்க்கும் 

நோக்கு வர்மம் 

- காதல்

அவள் அப்படிதான்

என்னை பிளாக் செய்து 5 நிமிடம் ஆகிறது..

வால்பேப்பரில் இன்னும் 

அவள் சிரித்துக்கொண்டு தான் இருக்கிறாள்..

நீதான் காரணம்

 புரியாத கவிதை 

உருவான இடம் நீ 


அறியாத இடம் 

திறந்தவள் நீ 


முடியாத உறவு 

தந்தவள் நீ


ஐயிரண்டு திங்கள் 

கொடுத்தவள் நீ


மை இரண்டு 

பூண்டவள் நீ 


பொய் திரண்டு 

பூத்தவள் நீ 


என் காதலி


மீண்டும் வெட்கப்படாதே

எத்தனை பொய் சொன்னாலும் 

நிரம்பதோ  உன் கன்னக்குழி 

வெட்கப்படாதே நீ அவ்ளோ அழகுதான் 

கனவில் உன் முத்தம்

நிறுத்தத்தில் நில்லாமல்

செல்லும் பேருந்தை போல

கன்னத்தில் இருந்தும் இல்லாமல் 

போய்விட்டது 

கனவில் உன் முத்தம்