எழுதலாம் என்று எண்ணி மறந்த கவிதை!
எழுதலாம் என்று எண்ணி எழுதுகையில் கிடைத்தது! பிள்ளை போட்ட கோலமென
இணையாமல் நிற்கிறது!
மீட்டு எடுத்த கவிதை
மலை - மாசு
மனிதனின் மாசுப்புரட்சியில்
கடை வரிசையில் நிற்பது மலையே!
தேவையில்லா குப்பையின்
கிடங்காய் மாரிப்போன - கடல்!
மாற்று விதை
அதற்கு மருந்தென மறுத்துப்போன - மண்!
மண்டியிட மறுத்தாலும் மனிதனால்
மறக்கபட்டது மலை மட்டுமே!
மலை - உயர்ந்தது
மண்ணில் உயர்ந்தது மலையானாலும்
மனிதன் போல் தான் தோன்றித்தனமாய்
தலை கனம் கொள்வதில்லை!
ஆதலால் என்றும் மலை - உயர்ந்ததே!!
காதலிக்கையில்
கூடுவிட்டு கூடுபாய முடிந்தால்
உன்னில் இருந்து - நான்
என்னை பார்க்கவேண்டும்
நீ சொல்வதை போல் உண்மையில்
நான் அழகா என்று!
ஆகச கோட்டை
உண்ணுவதாய் கனவு கண்டால்
வயிறு நிறையுமோ!
மலைமேல் ஏரிக்கொண்டால்
வானத்தை தொட்டதாகுமோ!
பிள்ளை நடையால்
பேரிடிதான் இடிக்குமோ!
கட்டை வண்டி ஏறினால்
காலம்தான் பின்னுக்கு போகுமோ!
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)