நரை கொண்ட விதை பறக்கிறது
நாரையை போல அல்ல
நயமாய்
இருப்பு பாதையில்
காது வைத்து கேட்க ஆசை - அடுத்த
ரயில் எந்த திசையிலிருந்து
வருமென்றுதான் தெரியவில்லை
கற்பனை சிறகு திறக்கும்போது
நானும் சேர்ந்து பறக்கிறேன்.
சன்னலோர பேருந்து பயணம்போல
அசயாமல் மிதக்கிறேன்
மறப்பது மட்டுமே
மனிதனுக்கு கொடுக்கப்பட்ட வரம்
மன்னிப்பது -
மறக்க நினைப்பதற்கே போதும்